திலகர் முனிவர் கோன்

பல்லவி  
நாமகட்குப் பெருந்தொண் டியற்றிப்பல்
      நாட்டினோர்தம் கலையிலும் அவ்வவர்
தாமகத்து வியப்பப் பயின்றொரு
      காத்திரக்கட லென்ன விளங்குவோன்;
மாமகட்குப் பிறப்பிட மாகமுன்
      வாழ்ந்திந்நாளில் வறண்டயர் பாரதப்
பூமகட்கு மனந்துடித் தேயிவள்
      புன்மைபோக்குவல் என்ற விரதமே.    1

நெஞ்சகத்தோர் கணத்திலும் நீங்கிலான்
      நீதமேயோர் உருவெனத் தோன்றினோன்;
வஞ்சகத்தைப் பகையெனக் கொண்டதை
      மாய்க்குமாறு மனதிற் கொதிக்கின்றோன்;
துஞ்சுமட்டுமிப் பாரத நாட்டிற்கே
      தொண்டிழைக்கத் துணிந்தவர் யாவரும்
அஞ்செழுத்தினைச் சைவர் மொழிதல்போல்
      அன்பொடோதும் பெயருடை யாரியன்    2

வீரமிக்க மராட்டியர் ஆரதம்
      மேவிப் பாரத தேவி திருநுதல்
ஆர வைத்த திலக மெனக்திகழ்
      ஐயன்நல்லிசைப் பாலகங் காதரன்
சேரலர்க்கு நினைக்கவுந் தீயென
      நின்ற எங்கள் திலக முனிவர்கோன்
சீரடிக்க லத்தினை வாழ்த்துவேன்
      சிந்தைதூய்மை பெறுகெனச் சிந்தித்தே.    3

No comments:

Post a Comment