லாஜபதி

    பல்லவி  
விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும்
      அதன்கதிர்கள் விரைந்து வந்து
கண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ?
      நின்னையவர் கனன்றுஇந் நாட்டு
மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்
      யாங்களெலாம் மறக்கொ ணாதுஎம்
எண்ணகத்தே, லாஜபதி! இடையின்றி
      நீ வளர்தல் கென்செய் வாரே?    1

ஒருமனிதன் தனைப்பற்றிப் பலநாடு
         கடத்தியவற் கூறு செய்தல்
அருமையிலை,எளிதினவர் புரிந்திட்டா
      ரென்றிடினும்,அந்த மேலோன்
பெருமையைநன் கறிந்தவனைத் தெய்வமென
      நெஞ்சினுளே பெட்பிற் பேணி
வருமனிதர் எண்ண ற்றார் இவரையெலாம்
      ஒட்டியெவர் வாழ்வ திங்கே?    2

பேரன்பு செய்தாரில் யாவரே
      பெருந்துயரம் பிழைத்து நின்றார்?
ஆரன்பு நாரணன்பால் இரணியன்சேய்
      செய்ததினால் அவனுக் குற்ற
கோரங்கள் சொலத்தகுமோ? பாரதநாட்
      டிற்பக்தி குலவி வாழும்
வீரங்கொள் மனமுடையார் கொடுந்துயரம்
      பலஅடைதல் வியத்தற் கொன்றோ?    3

No comments:

Post a Comment