பாரத தேவியின் அடிமை

நந்தன் சரித்திரத்திலுள்ள "ஆண்டைக் கடிமைக்கார னல்லவே"என்ற பாட்டின் வர்ணமெட்டையும் கருத்தையும் பின்பற்றி எழுதப்பட்டது.


பல்லவி


அன்னியர் தமக்கடிமை யல்லவே-நான் 
அன்னியர் தமக்கடிமை யல்லவே.
(நாம்)

சரணங்கள்

1.

மன்னிய புகழ்ப் பாரத தேவி 
தன்னிரு தாளிணைக் கடிமைக் காரன்.
(அன்)

2.

இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம் 
திலக முனிக்கொத்த அடிமைக் காரன்
(அன்)

3.

வெய்ய சிறைக்குள்ளே புன்னகை யோடுபோம் 
ஐயன் பூ பேந்த்ரனுக் கடிமைக் காரன்
(அன்)

4.

காலர் முன்நிற்பினும் மெய்தவறா எங்கள் 
பாலர் தமக்கொத்த அடிமைக் காரன்
(அன்)

5.

காந்தன லிட்டாலும் தர்மம் விடாப்ரம்ம 
பாந்தவன் தாளிணைக் கடிமைக் காரன்.
(அன்)

No comments:

Post a Comment