வ.உ.சி.க்கு வாழ்த்து

வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார் 
      மன்னனென மீண்டான் என்றே 
கேளாத கதைவிரைவிற் கேட்பாய்நீ, 
      வருந்தலைஎன் கேண்மைக் கோவே! 
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம் 
      நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி, 
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே 
      வாழ்த்துதிநீ வாழ்தி!வாழ்தி!

No comments:

Post a Comment