நாம் என்ன செய்வோம்!

"நாம் என்ன செய்வோம்! புலையரே! இந்தப் பூமியி லில்லாத 
புதுமையைக் கண்டோம்" என்ற வர்ண மெட்டு


ராகம்-புன்னாகவரானி
தாளம்-ரூபகம்

பல்லவி


நாம் என்ன செய்வோம்!துணைவரே!-இந்தப் 
பூமியி லில்லாத புதுமையைக் கண்டோம்.
(நாம்)

1.

திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு 
      செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு; 
பலதிசையும் துஷ்டர் கூட்டங்க ளாச்சு 
      பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு
(நாம்)

2.

தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார் 
      செய்யுந் தொழில்முறை யாவையும் விட்டார் 
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார் 
      பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார்
(நாம்)

3.

தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார் 
      செய்யுந் தொழில்முறை யாவையும் விட்டார் 
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார் 
      பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார்
(நாம்)

4.

தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார் 
      செய்யுந் தொழில்முறை யாவையும் விட்டார் 
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார் 
      பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார்
(நாம்)

No comments:

Post a Comment