தேச பக்தர் சிதம்பரம்பிள்ளை மறுமொழி


சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே 
      துஞ்சிடோம்:-இனி-அஞ்சிடோம்; 
எந்த நாட்டினும் இந்த அநீதிகள் 
      ஏற்குமோ? தெய்வம்-பார்க்குமோ?1

வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை வாழ்த்து வோம்;-முடி-தாழ்த்துவோம்; 
எந்தம் ஆருயி ரன்னையைப் போற்றுதல் 
      ஈனமோ?-அவ-மானமோ?2

பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு 
      போகவோ?-நாங்கள்-சாகவோ? 
அழுது கொண்டிருப் போமோ? ஆண் பிள்ளைகள் 
      அல்லமோ?-உயிர்-வெல்லமோ?3

பாரத தேவியின் அடிமை

நந்தன் சரித்திரத்திலுள்ள "ஆண்டைக் கடிமைக்கார னல்லவே"என்ற பாட்டின் வர்ணமெட்டையும் கருத்தையும் பின்பற்றி எழுதப்பட்டது.


பல்லவி


அன்னியர் தமக்கடிமை யல்லவே-நான் 
அன்னியர் தமக்கடிமை யல்லவே.
(நாம்)

சரணங்கள்

1.

மன்னிய புகழ்ப் பாரத தேவி 
தன்னிரு தாளிணைக் கடிமைக் காரன்.
(அன்)

2.

நம்ம ஜாதிக்கு அடுக்குமோ?

புதிய கட்சித் தலைவரை நோக்கி நிதானக் கட்சியார் 
சொல்லுதல் 

"ஓய் நந்தனாரே!நம்ம ஜாதிக் கடுக்குமோ? நியாயந் தானோ? 
நீர் சொல்லும்?" என்ற வர்ண மெட்டு

பல்லவி


ஓய் திலகரே!நம்ம ஜாதிக் கடுக்குமோ? 
செய்வது சரியோ? சொல்லும்


1.

முன்னறி யாப்புது வழக்கம்-நீர் 
      மூட்டி விட்டதிந்தப் பழக்கம்-இப்போது 
எந்நக ரிலுமிது முழக்கம்-மிக இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம்.
(ஓய் திலகரே!)

2.

கோக்கலே சாமியார் பாடல்

இராமலிங்க சுவாமிகள்
"களங்கமறப் பொதுநடம் நான் கண்டு கொண்ட தருணம்" 
என்று பாடிய பாட்டைத் திரித்துப் பாடியது.


களங்கமுறும் மார்லிநடம் கண்டுகொண்ட தருணம் 
கடைச் சிறியேன் உளம்த்துக் காய்த்ததொரு காய்தான், 
விளங்கமுறப் பழுத்திடுமோ? வெம்பிவிழுந் திடுமோ? 
வெம்பாது விழினுமென் றன் கரத்திலகப் படுமோ? 
வளர்த்த பழம் கர்சானென்ற குரங்குகவர்ந் திடுமோ? 
மற்றிங்ஙன் ஆட்சிசெய்யும் அணில்கடித்து விடுமோ? 
துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ, அல்லால் 
தொண்டைவிக்கு மோஏதும் சொல்லரிய தாமோ?

நடிப்புச் சுதேசிகள்

பழித்தறிவுறுத்தல்
கிளிக் கண்ணிகள்நெஞ்சில் உரமு மின்றி நேர்மைத் திறமு மின்றி, 
      வஞ்சனை சொல்வா ரடீ!-கிளியே! 
      வாய்ச் சொல்லில் வீர ரடீ1

கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, 
      நாட்டித்திற் கொள்ளா ரடீ!-கிளியே! 
      நாளில் மறப்பா ரடீ!2

சொந்த அரசும் புவிச் சுகங்களும் மாண்பு களும் 
      அந்தகர்க் குண்டாகுமோ!-கிளியே 
      அலிகளுக் கின்ப முண்டோ?3

வெள்ளைக்கார விஞ்ச் துரை கூற்று

ராகம்-தண்டகம்தாளம்-ஆதி

1.

நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை 
      நாட்டினாய்;-கனல்-மூட்டினாய்; 
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே 
      மாட்டுவேன்;-வலி-காட்டுவேன்.
(நாட்டி)

2.

கூட்டங் கூடி வந்தே மாதரமென்று 
      கோஷித்தாய்;-எமைத் தூஷித்தாய்; 
ஓட்டம்நாங்களெடுக்க வென்றே கப்பல் 
      ஓட்டினாய்; பொருள்-ஈட்டினாய்.
(நாட்டி)

3.

நாம் என்ன செய்வோம்!

"நாம் என்ன செய்வோம்! புலையரே! இந்தப் பூமியி லில்லாத 
புதுமையைக் கண்டோம்" என்ற வர்ண மெட்டு


ராகம்-புன்னாகவரானி
தாளம்-ரூபகம்

பல்லவி


நாம் என்ன செய்வோம்!துணைவரே!-இந்தப் 
பூமியி லில்லாத புதுமையைக் கண்டோம்.
(நாம்)

1.

திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு 
      செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு; 
பலதிசையும் துஷ்டர் கூட்டங்க ளாச்சு 
      பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு
(நாம்)

2.

தொண்டு செய்யும் அடிமை

சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு 
ஆங்கிலேய உத்தியோகஸ்தன் கூறுவது 

நந்தனார் சரித்திரத்திலுள்ள 
"மாடு தின்னும் புலையா!-உனக்கு மார்கழித் திருநாளா?" 
என்ற பாட்டின் வர்ண மெட்டு

1.

தொண்டு செய்யும் அடிமை!-உனக்குச் 
      சுதந்திர நினைவோடா? 
பண்டு கண்ட துண்டோ?-அதற்குப் 
      பாத்திர மாவாயோ?
(தொண்டு)

2.

சத்ரபதி சிவாஜி

தன் சைனியத்திற்குக் கூறியது

ஜயஜய பவானி!ஜயஜய பாரதம்! 
ஜயஜய மாதா!ஜயஜய துர்க்கா! 
வந்தே மாதரம்!வந்தே மாதரம்!



சேனைத் தலைவர்காள்! சிறந்தமந் திரிகாள்! 
யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்!
5


அதிரத மன்னர்காள்! துரகத் ததிபர்காள்! 
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்! 

வேலெறி படைகாள்!சூலெறி மறவர்காள்! 
கால னுருக்கொளும் கணைதுரந் திடுவீர், 

தேடிச் சோறு நிதந்தின்று

தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

நல்லதோர் வீணை

நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வரலாறு

செப்டெம்பர் 11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினமாகும். 11 டிசம்பர் 1882ம் ஆண்டு பிறந்து 11 செப்ரெம்பர் 1921ம் ஆண்டு மறைந்த இந்த உண்மையான உணர்வு பூர்வமான கவிஞன் தன் வாழ்வில் சந்தித்த சோதனைகள் தாம் எத்தனை? வேதனைகள் தாம் எத்தனை? தான் வாழ்ந்த நாட்களில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறாமல் பசியில் பட்டினியில் வாழ்ந்தவன் தான் பாரதி என்கின்ற மகாகவி! 
 
பசியாலும், பிணியாலும் வாடி இறந்தவனை "யானை அடித்து கொன்றது" என்ற கட்டுக்கதையைக் கட்டி தன் அவமானத்திற்கு தமிழ்நாடு திரைபோட்டுள்ளது. யானையால் பாரதி தள்ளுண்ட நிகழ்வு ஒரு யூன் மாதத்தில் நிகழ்ந்தது. அச் சம்பவத்தின் பின்பு அவர் வழக்கம் போல "சுதேச மித்திரன்" பத்திரிகை அலுவலகம் சென்று தனது வேலைகளைச் செய்து வந்துள்ளார். மேலும் சென்னை நகரக் கடற்கரைப் பொதுக்கூட்டங்களில் தொடர்ந்தும் கலந்து கொண்டு வந்துள்ளார். யூலை 31ம் திகதி கருங்கற்பாளைய வாசகசாலையின் 5வது வருடக் கொண்டாட்டக் கூட்டத்தில் பாரதியார் பேசிய உரையின் தலைப்பு "மனிதனுக்கு மரணமில்லை."
 

பாரத சமுதாயம்

    ராகம்-பியாக்    தாளம்-திஸ்ர ஏகதாளம்
பல்லவி
பாரத சமுதாயம் வாழ்கவே!-வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே!-ஜய ஜய ஜய    (பாரத)
அனுபல்லவி
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்  
      முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பி லாத சமுதாயம்
      உலகத் துக்கொரு புதுமை-வாழ்க    (பாரத)
சரணங்கள்
மனித ருணவை மனிதர் பறிக்கம்
      வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
      வாழ்க்கை இனியுண்டோ-புலனில்
      வாழ்க்கை இனியுண்டோ?-நம்மி லந்த
      வாழ்க்கை இனியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
      எண்ணரும் பெருநாடு;
கனியும் கிழங்கும் தானி யங்களும்
      கணக்கின் றித்தரு நாடு-இது
      கணக்கின் றித்தரு நாடு-நித்த நித்தம்
      கணக்கின் றித்தரு நாடு-வாழ்க!    (பாரத)

பாரத தேவியின் திருத்தசாங்கம்

   
நாமம்
(காம்போதி)

பச்சை மணிக்கிளியே!பாவியெனக் கேயோகப்
பிச்சை யருளியதாய் பேருரையாய்!-இச்சகத்தில்
பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த
பாரதமா தேவியெனப் பாடு.    1

நாடு
(வசந்தா)

பாரத மாதா திருப்பள்ளி யெழுச்சி

பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்,
      புன்மை யிருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
      எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
      தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்;
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே!
      வியப்பிது காண்!பள்ளி யெழுந்தரு ளாயே!    1

லாஜபதியின் பிரலாபம்

கண்ணிகள்   
நாடிழந்து மக்களையும் நல்லாளை யும்பிரிந்து
வீடிழந்திங் குற்றேன் விதியினையென் சொல்கேனே?    1
வேதமுனி போன்றார் விருத்தரா மெந்தையிரு
பாதமலர் கண்டு பரவப் பெறுவேனோ?    2
ஆசைக் குமரன் அருச்சுனனைப் போல்வான்தன்
மாசற்ற ஜோதி வதனமினிக் காண்பேனோ?    3

திலகர் முனிவர் கோன்

பல்லவி  
நாமகட்குப் பெருந்தொண் டியற்றிப்பல்
      நாட்டினோர்தம் கலையிலும் அவ்வவர்
தாமகத்து வியப்பப் பயின்றொரு
      காத்திரக்கட லென்ன விளங்குவோன்;
மாமகட்குப் பிறப்பிட மாகமுன்
      வாழ்ந்திந்நாளில் வறண்டயர் பாரதப்
பூமகட்கு மனந்துடித் தேயிவள்
      புன்மைபோக்குவல் என்ற விரதமே.    1

நெஞ்சகத்தோர் கணத்திலும் நீங்கிலான்
      நீதமேயோர் உருவெனத் தோன்றினோன்;
வஞ்சகத்தைப் பகையெனக் கொண்டதை
      மாய்க்குமாறு மனதிற் கொதிக்கின்றோன்;
துஞ்சுமட்டுமிப் பாரத நாட்டிற்கே
      தொண்டிழைக்கத் துணிந்தவர் யாவரும்
அஞ்செழுத்தினைச் சைவர் மொழிதல்போல்
      அன்பொடோதும் பெயருடை யாரியன்    2

வீரமிக்க மராட்டியர் ஆரதம்
      மேவிப் பாரத தேவி திருநுதல்
ஆர வைத்த திலக மெனக்திகழ்
      ஐயன்நல்லிசைப் பாலகங் காதரன்
சேரலர்க்கு நினைக்கவுந் தீயென
      நின்ற எங்கள் திலக முனிவர்கோன்
சீரடிக்க லத்தினை வாழ்த்துவேன்
      சிந்தைதூய்மை பெறுகெனச் சிந்தித்தே.    3

பூபேந்திரர் விஜயம்

பாபேந்திரியஞ் செறுத்த எங்கள்
      விவேகானந்தப் பரமன் ஞான
ரூபேந்திரன் தனக்குப் பின்வந்தோன்
      விண்ணவர்த முலகை யாள்ப்ர
தாபேந்திரன் கோப முறினுமதற்கு
      அஞ்சிய றந் தவிர்கி லாதான்
பூபேந்திரப் பெயரோன் பாரதநாட்
      டிற்கடிமை பூண்டு வாழ்வோன்    1

குரு கோவிந்தர்

ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு
விக்ரம னாண்டு, வீரருக் கமுதாம்
ஆனந்த புரத்தி லார்ந்தினி திருந்தனன்;
பாஞ்சா லத்துப் படர்தரு சிங்கக்
குலத்தினை வகுத்த குருமணி யாவான்.    5


ஞானப் பெருங்கடல்,நல்லிசைக் கவிஞன்,
வானம்வீழ்ந் துதிரினும் வாள்கொடு தடுக்கும்
வீரர் நாயகன்,மேதினி காத்த
குருகோ விந்த சிங்கமாங்க கோமகன்,
அவன் திருக் கட்டளை அறிந்துபல் திசையினும்,    10

வ.உ.சி.க்கு வாழ்த்து

வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார் 
      மன்னனென மீண்டான் என்றே 
கேளாத கதைவிரைவிற் கேட்பாய்நீ, 
      வருந்தலைஎன் கேண்மைக் கோவே! 
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம் 
      நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி, 
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே 
      வாழ்த்துதிநீ வாழ்தி!வாழ்தி!

லாஜபதி

    பல்லவி  
விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும்
      அதன்கதிர்கள் விரைந்து வந்து
கண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ?
      நின்னையவர் கனன்றுஇந் நாட்டு
மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்
      யாங்களெலாம் மறக்கொ ணாதுஎம்
எண்ணகத்தே, லாஜபதி! இடையின்றி
      நீ வளர்தல் கென்செய் வாரே?    1

வாழ்க திலகன் நாமம்

பல்லவி  


வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே!
வீழ்க கொடுங் கோன்மை!வீழ்க!வீழ்கவே!    2
சரணங்கள்  

1.  
நாலுதிசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே!
      நரக மொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!
ஏலுமனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே!
      எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே!    (வாழ்க)

தாதாபாய் நவுரோஜி

முன்னாளில் இராமபிரான் கோதமனா
      தியபுதல்வர் முறையில் நின்று
பன்னாடு முடிவணங்கத் தலைமைநிறுத்
      தியஎமது பரத கண்ட
மின்னாள்இங் கிந்நாளின் முதியோளாய்ப்
      பிறரெள்ள வீழ்ந்த காலை
அன்னாளைத் துயர்தவிர்ப்பான் முயல்வர்சில
      மக்களவ ரடிகள் சூழ்வாம்.    1

மகாத்மா காந்தி பஞ்சகம்

வாழ்க நீ! எம்மான்,இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா!நீ வாழ்க!வாழ்க!    1

சுதந்திரப் பள்ளு

பள்ளர் களியாட்டம்

ராகம்-வராளிதாளம்-ஆதி

பல்லவி

ஆடுவோமே-பள்ளுப் பாடு வோமே; 
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று
(ஆடுவோமே)

சரணங்கள்

1.

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வென்ளைப் 
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே-பிச்சை 
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே-நம்மை 
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே
(ஆடுவோமே)

2.

சுதந்திர தேவியின் துதி

இதந்தரு மனையின் நீங்கி
      இடர்மிகு சிறைப்பட் டாலும்,
பதந்திரு இரண்டும் மாறிப்
      பழிமிகுத் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
      விளைந்தெனை அழித்திட் டாலும்

      சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே.    1

சுதந்திரப் பயிர்

கண்ணிகள்

தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வேசா!இப்யிரைக் 
கண்ணீராற் காத்தோம்;கருகத் திருவுளமோ?
1


எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த 
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?
2

விடுதலை

ராகம்-பிலகரி

விடுதலை!                                       விடுதலை!விடுதலை!
1.
பறைய ருக்கும் இங்கு தீயர் 
      புலைய ருக்கும் விடுதலை; 
பரவ ரோடு குறவருக்கும் 
      மறவ ருக்கும் விடுலை; 
திறமை கொண்ட தீமை யற்ற 
      தொழில்பு ரிந்து யாவரும் 
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி 
      வாழ்வம் இந்த நாட்டிலேவிடுதலை!
(விடுதலை)

2.

சுதந்திர தாகம்

ராகம்-கமாஸ்           தாளம்-ஆதி


என்று தணியும்இந்தச் சுதந்திர தாகம் 
      என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? 
என்றெம தன்னை கை விலங்குகள் போகும்? 
      என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்? 
அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே! 
      ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே! 
வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ? 
      மெய்யடி யோம் இன்னும் வாடுதல் நன்றோ?
1

சுதந்திரப் பெருமை

"தில்லை எவளியிலே கலந்துவிட் டாலவர் 
திரும்பியும் வருவாரோ?"என்னும் வர்ணமெட்டு
1.வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் 
      வேறொன்று கொள்வாரோ?-என்றும் 
ஆரமு துண்ணுதற் காசை கொண்டார் கள்ளில் 
      அறிவைச் செலுத்துவாரோ?
(வீர)

2.

வாழிய செந்தமிழ்

ஆசிரியப்பா

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! 
வாழிய பாரத மணித்திரு நாடு! 
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க! 
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக! 
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக! 
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும் 
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக! 
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க! 
வந்தே மாதரம்!வந்தே மாதரம்!

தமிழச் சாதி

எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்,
நாட்பட நாட்பட நாற்றமும் சேறும்
பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்
நோய் களமாகி அழிகெனும் நோக்கமோ?
விதியே, விதியே, தமிழச் சாதியை    5

என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்
வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ?    10

தமிழ்மொழி வாழ்த்து

தான தனத்தன தான தனத்தன 
தான தந்தா னே
1.வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி 
வாழிய வாழிய வே!


2.

வான மளந்த தனைத்தும் அளந்திடும் 
வண்மொழி வாழிய வே!


3.

தமிழ்த் தாய்

தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண்டுதல்
தாயுமானவர் ஆனந்தக்களிப்புச் சந்தம்
ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை
      ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
      மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.    1

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
      இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
      இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
      வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
      பரவும்வகை செய்தல் வேண்டும்.    1

செந்தமிழ் நாடு

1.செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் 
      தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள் 
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு 
      சக்தி பிறக்குது மூச்சினிலே
(செந்தமிழ்)

2.

சத்ரபதி சிவாஜி

தன் சைனியத்திற்குக் கூறியது

ஜயஜய பவானி!ஜயஜய பாரதம்! 
ஜயஜய மாதா!ஜயஜய துர்க்கா! 
வந்தே மாதரம்!வந்தே மாதரம்!



சேனைத் தலைவர்காள்! சிறந்தமந் திரிகாள்! 
யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்!
5


அதிரத மன்னர்காள்! துரகத் ததிபர்காள்! 
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்! 

வேலெறி படைகாள்!சூலெறி மறவர்காள்! 
கால னுருக்கொளும் கணைதுரந் திடுவீர், 

கண்ணம்மா எனது குலதெய்வம்

ராகம் - புன்னாகவராளி

பல்லவி

நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

சரணங்கள்

1. பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்னை)

2. மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமைபுகுந்தன, கொன்றவைபோக் கென்று (நின்னை)

கண்ணம்மா என் காதலி - 6

யோகம்

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! 1

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! 2

கண்ணன் என் ஆண்டான்

புன்னாகவராளி - திஸ்ர ஏகதாளம்
ரஸங்கள் : அற்புதம், கருணை

தஞ்ச முலகினில் எங்கணு மின்றித்
தவித்துத் தடுமாறி,
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்,
பார முனக் காண்டே!
ஆண்டே! - பாரமுனக் காண்டே! 1

தாயின் மணிக்கொடி

   
பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!   

சரணங்கள்

1.   
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன்
         உச்சியின் மேல்‘வந்தே மாதரம்’என்றே
பாங்கின் எழுதித் திகழும்-செய்ய
         பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!    (தாயின்)

வேலன் பாட்டு

ராகம்-புன்னாகவராளி    தாளம்-திஸ்ர ஏகம்

வில்லினை யொத்த புருவம் வளைத்தனை;
      வேலவா!-அங்கொர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
      யானது, வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
      வள்ளியைக்-கண்டு
சொக்கி மரமென நின்றனை
      தென்மலைக் காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
      பாதகன்-சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக்
     கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
      வள்ளியை-ஒரு
பார்ப்பனக் கோலந் தரித்துக்
     கரந்தொட்ட வேலவா!   

முரசு

வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே!
நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே!

ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக் கெல்லாம் முதலாகும்-ஒரு
தெவ்ம் துணைசெய்ய வேண்டும்.

குயிலும் குரங்கும்

மற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துத் துடித்து வருகையிலே-
வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே!
நெஞ்சகமே! தொல்விதியின் நீதியே! பாழுலகே!
கண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்! 5

பெண்ணால் அறிவிழக்கும் பித்தரெல்லாம் கேண்மினோ!
காதலினைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ!
மாதரெலாங் கேண்மினோ! வல்விதியே கேளாய் நீ!
மாயக் குயிலோர் மரக்கிளையில் வீற்றிருந்தே
பாயும் விழிநீர் பதைக்குஞ் சிறியவுடல் 10

காதலோ காதல்

கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன்,
எண்ணுதலுஞ் செய்யேன், இருபது பேய் கொண்டவன்போல்
கண்ணும் முகமும் களியேறிக் காமனார்
அம்பு துளிகள் அகத்தே அமிழ்ந்திருக்க,
கொம்புக் குயிலுருவங் கோடிபல கோடியாய் 5

ஒன்றே யதுவாய் உலகமெலாந்தோற்றமுற
சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி,
நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்
தாளம் படுமோ? தறிபடுமோ? யார் படுவார்?
நாளொன்று போயினது; நானு மெனதுயிரும், 10

கண்ணம்மா என் காதலி - 4

நாதநாமக்கிரியை - ஆதிதாளம் ; சிருங்கார ரஸம்

மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை - இவன்
மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?
சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ? - இங்கு
செய்யத் தகாதசெய்கை செய்தவ ருண்டோ?
வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன் - நின்றன்
மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன்.
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? - எனக்
கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா! 1

குயிலும் மாடும்

காலைத் துயிலெழுந்து, காலிரண்டு முன்போலே
சோலைக் கிழுத்திட, நான் சொந்தவுணர் வில்லாமே
சோலையினில் வந்துநின்று, சுற்றுமுற்றுந் தேடினேன்,
கோலப் பறவைகளின் கூட்டமெல்லாங் காணவில்லை.
மூலையிலோர் மாமரத்தின் மோட்டுக் கிளையினிலே 5

நீலக் குயிலிருந்து நீண்ட கதை சொல்லுவதும்,
கீழே யிருந்தோர் கீழக்காளை மாடதனை
ஆழ மதியுடனே ஆவலுறக் கேட்பதுவும்,
கண்டேன், வெகுண்டேன், கலக்கமுற்றேன்; நெஞ்சிலனல்
கொண்டேன், குமைந்தேன், குமுறினேன், மெய்வெயர்த்தேன்; 10

நான்காம் நாள்

நான்காம்நாள் என்னை நயவஞ்சனைபுரிந்து
வான்காதல் காட்டி மயக்கிச் சதிசெய்த
பொய்ம்மைக் குயிலென்னைப் போந்திடவே கூறியநாள்
மெய்ம்மை யறிவிழந்தென் வீட்டிலே, மாடமிசை
சித்தத் திகைப்புற்றோர் செய்கை யறியாமல், 5

எத்துக் குயிலென்னை எய்துவித்த தாழ்ச்சியெலாம்
மீட்டும் நினைத்தங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே,
காட்டுத் திசையினிலென் கண்ணிரண்டும் நாடியவால்,
வானத்தே ஆங்கோர் கரும்பறவை வந்திடவும்
யானதனைக் கண்டே; 'இது நமது பொய்க் குயிலோ?' 10

புதிய ஆத்திசூடி

ஆத்திசூடி இளம்பிறை யணிந்து
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணா¢ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
நூல்

பாப்பாப் பாட்டு

ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா. 1

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா. 2

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா. 3

அழகுத் தெய்வம்

மங்கியற்தோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன். 1

யோகந்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன்;
யோகமே தவம் தவமே யோக மென உரைத்தாள்.
‘ஏகமோ பொருளன்றி இரண்டாமோ’ என்றேன்;
‘இரண்டுமாம், ஒன்றுமாம், யாவுமாம்’ என்றாள்.
‘தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ
தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ?’ என்றேன்
‘வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்.
விருப்புடனே பெய்குவது வேறாமோ?’ என்றாள். 2

இருளும் ஒளியும்

வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான்
மோனவெளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான்.
மெய்யெல்லாஞ் சோர்வு விழியில் மயக்கமுற,
உய்யும் வழியுணரா துள்ளம் பதைபதைக்க,
நாணுந் துயரும் நலிவுறுத்த நான்மீண்டு, 5

பேணும்மனை வந்தேன்; பிரக்கினைபோய் வீழ்ந்துவிட்டேன்,
மாலையிலே மூர்ச்சைநிலை மாறித் தெளிவடைந்தேன்;
நாலுபுறமுமெனை நண்பர் வந்து சூழ்ந்துநின்றார்.
"ஏனடா மூர்ச்சையுற்றாய்? எங்கு சென்றாய்? ஏது செய்தாய்?
வானம் வெளிறுமுன்னே வைகறையி லேதனித்துச் 10

சென்றனை என்கின்றாரச் செய்தி என்னே? ஊணின்றி
நின்றதென்னே?" என்று நெரித்துவிட்டார் கேள்விகளை,
இன்னார்க் கிதுசொல்வ தென்று தெரியாமல்
"என்னாற் பலவுரைத்தல் இப்பொழுது கூடாதாம்.
நாளை வருவீரேல் நடந்ததெலாஞ் சொல்வேன் இவ் 15